Sunday 25 August 2013

முள்றியின் டைரி 16:சில நினைவுகள் II :


நான் நேற்று “ Inner Engineering – Introductory Speech by Isha Foundation”  சென்றிருந்தேன். ஒரு நிமிடம் கண்ணை மூடி நீங்கள் எப்படிப் பட்டவர் என்று கண்டறிய முயற்சி பண்ணுங்கள் என்றார்கள். கண்ணை மூடியதுதான் தாமதம், டமாலென்று இரண்டு நிகழ்ச்சிகள் வந்து என் நினைவில் ஊசலாட ஆரம்பித்து விட்டன.  


நிகழ்ச்சி No: 1.  


என் அப்பா என்னைப் பற்றி அடிக்கும் காமெண்ட்.எங்கள் வீட்டில் நாங்கள் அண்ணன் தம்பி 3 பேர்.  No  அக்கா தங்கைஸ்.அதில் நானும் என் சின்ன அண்ணனும் சரியான 15 ( அதாங்க 7 ½ + 7 ½). எங்கள் குண நலன்களை ( ????)  விவரிக்க எங்க அப்பா அடிக்கடி ஒரு கதை சொல்வார். ஒரு வீட்டில் ஒரு பெற்றோருக்கு 3 பசங்க இருந்தார்களாம். தங்கள் பசங்க ரொம்ப அடாவடியாகவும், அட்டூழியம் பண்ணுகிறவர்களாகவும் இருப்பதாக எல்லோரிடமும் சொல்லி புலம்புவராம். அப்போது ஒரு நண்பர் “ அது எப்படி சார் 3 பசங்களும் மோசமாக இருக்க முடியும். அதில் ஒருத்தன் கூடவா நல்லவன் கிடையாது” என்று ஆச்சரியமாகக் கேட்டாராம். " இருக்கான் சார். வெளியே போய்ப் பாருங்க. எங்க வீட்டின் கூரை மேலே ஒரு பையன் தீ வைத்துக் கொண்டிருப்பான் பாருங்க. அவன்தான் உள்ளதிலேயே கொஞ்சம் நல்லவன்" என்றாராம். சொல்லி விட்டு, முரளி, நீ ரொம்ம்ம்ம்ம்ப நல்லவண்டா என்பார்.


நிகழ்ச்சி No: 2


போன டிசம்பரில், 5 வருடம் ரஷ்யாவில் என்னுடன் நெருங்கிப் பழகி என் அண்ணன் ஸ்தானத்தில் இருந்த என் நெருங்கிய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். என்னுடன் என் மனைவியும் என் பெண்ணும் இருந்தனர். அவர் என் மனைவியை அப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறார். நீதான், அர்ச்சனாவாம்மா, முதலில் உன் கையைக் கொடு என்று சொல்லி விட்டு அவள் கையைப் பிடித்து ஒரு 5 நிமிடம் குலுக்கினார். என் மனைவிக்கோ ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடன் “ நான் என்னங்க சாதித்து விட்டேன், என்னை எதற்கு இப்படிப் பாராட்டுகிறீர்கள்” என்றாள் தன்னடக்கத்துடன். ஏம்மா, இவனைக் கல்யாணம் பண்ணி Already 15 வருடம் குடும்பத்தை நடத்தி இருக்கிறாயே, அதுவே ஒரு பெரிய சாதனை இல்லையாம்மா என்றார் ( எனக்கு இப்படி பல்பு கொடுக்க ஒரு பெரிய கோஷ்டியே காத்துக் கொண்டிருக்கு).


Flash Back over…


கண் விழித்துப் பார்த்த எனக்கு மகாக் குழப்பம்- நான் நல்லவனா கெட்டவனா என்று.


நீங்க சொல்லுங்க மக்காஸ்  - நான் நல்லவனா கெட்டவனா? 


(சொந்தச் செலவுல சூன்யம் வெச்சுக்கிறது என்பது இதுதானோ?)



வெ.பாலமுரளி

No comments:

Post a Comment