Saturday 26 October 2013

Cooking Tips.....



October 26, 2013 at 1:22pm
I wrote these wonderful cooking tips in 1997 for our Tamil Magazine in Kenya.Due to high demands among our Nairobi Ladies, I am republishing these tips.


Note :


1. Gentle men .....Please do not read this. அதையும் மீறி வாசித்து மனம் புண்பட்டால் நான் பொறுப்பல்ல.2. Non Tamil Speaking Folks...Please accept my apology for not being able to translate this to English due to some technical problems.


தாய்க்குலங்களுக்கு உபயோகமான சில சமையற்குறிப்புகள் :


1. பழைய இட்லி பூசனம் பிடித்து விட்டதா ? கவலையே வேண்டாம். அதன் மேலுள்ள பூசனத்தை நீக்கி விட்டு , அதை தோசை மாவோடு கலந்து சிறிது சோடா உப்புப் போட்டு , தோசையாக வார்த்து விடுங்கள் ( மறக்காமல், சாப்பிடும்போது (????) வீட்டில்  ரூம் ஸ்ப்ரே அடித்து விடவும்).


2. மதியம் வைத்த சாதம் , தண்ணீர் விட்டுப் போய் லேசாக ஊசிப் போன வாசம் வருகிறதா ? எதற்குக் கவலை? மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து, சோம்பு, மிளகு, வெங்காயம் போன்ற வாசனைப் பொருட்கள் சேர்த்து, வெயிலில் காய வைத்து வடகமாக ஆக்கி விடுங்கள். அதன் சுவையே தனிதான் (?????).


3. இட்லி கல் போல் இருக்கிறதா ( பெரும்பாலும் அப்படித்தானிருக்கும்) ?நோ டென்ஷன். அதை சிறு சிறு பீஸாக கட் பண்ணி , அதன் மேல் க்ரீம் தடவி, லேசாக சர்க்கரையைத் தூவி, அதன் மேல் டூத் பிக்கைக் குத்தி, குழந்தைகளுக்கும், கணவருக்கும் கொடுத்தால், இது ஒரு ஏதோ புது பதார்த்தம் போலிருக்கு  என்று ( வழக்கம்போல்) நினைத்து ( ஏமாந்து) ஒரு நிமிடத்தில் காலி பண்ணி விடுவார்கள்.


4. மதியம் வைத்த கறி கெட்டுப் போய் விட்டதா ? டோண்ட் வொர்ரி ..பீ ஹேப்பி. அதை குழம்புடன் மிக்ஸ் பண்ணி நன்றாக சுட வைத்து, சாத்தத்துடன் பிசைந்து, நிலாச் சோறு என்று   உருட்டி உருட்டிக் கொடுத்தால் அனைவரும் விரும்பிச்  சாப்பிடுவார்கள்  ( முடிந்தால் குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்கவும்).


5. காலையில் வைத்த சட்னி சலித்து ( ஊசி) ப்  போய் விட்டதா ? டென்ஷனே வேண்டாம். அதை மதியம் வைக்கும் சாம்பாரிலோ, புளிக் குழம்பிலோ கரைத்து விட்டு விடுங்கள். குழம்பும் கணிசமாக இருப்பதோடு, வாசனையும் ஆளை சும்மா கும்முன்னு தூக்கும். ( முடிந்த வரை , அதை ரசத்தில் கரைப்பதைத் தவிர்க்கவும். அப்படியே  மறந்து போய் கரைத்து விட்டாலும் தவறில்லை).


6. இவை தவிர, வேலைக்காரிகளுக்கு வைத்திருக்கும் பிரெட் கேட்டுப் போனால் அதை வைத்து வெஜிடபிள் பிரியாணி செய்வது, திடீரென்று எதிர்பாராமல் விருந்தினர் வந்து விட்டால், குழம்பிலும் ரசத்திலும் ஏகத்துக்கும் தண்ணீரை ஊற்றி அதன் சுவையை மேலும் கூட்டுவது, உருளைக் கிழங்கையும், முள்ளங்கியையும் தாராளமாகப் போட்டு அதன்  Viscosit யை அதிகரிப்பது போன்ற அடிப்படை குறிப்புகள் அனைவருக்கும் தெரிந்தவை என்பதால் மறுபடியும் விளக்கவில்லை.


7. மிக முக்கியமாக, மேற்கூறிய குறிப்புகளை உபயோகப்படுத்தி, சுவையான ( ???) சமையல் செய்து விட்டு, எங்க வீட்டு 'இது' நான் என்ன சமைத்தாலும் ஒண்ணும் சொல்லாமல் சாப்பிட்டு விட்டுப்  போய் விடும் என்று மற்ற பெண்டிரிடம் Marketing பண்ண மறந்து விட வேண்டாம்.


வெ. பாலமுரளி.


பி.கு: மங்கையர்  மலர்  மன்னிக்கவும்.    

No comments:

Post a Comment